by Staff Writer 06-01-2021 | 8:48 PM
Colombo (News 1st) கண்டி - அக்குரணையில் தாழ்நிலப்பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
கண்டி - மாத்தளை பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகள் வத்தேகம ஊடான மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அக்குரணையில் இன்று மாலை தொடக்கம் கடும் மழை பெய்து வருகிறது.
இதனால் துனுவில சந்தி முழுமையாக வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.
அக்குரணை நகர் இதற்கு முன்னர் பல தடவைகள் வௌ்ளத்தில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.