Mask அணியாதோருக்கு PCR

Mask அணியாதோருக்கு PCR பரிசோதனை 

by Staff Writer 05-01-2021 | 9:18 AM
Colombo (News 1st) முகக்கவசம் அணியாதவர்களை சட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இன்று (05) முதல் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாத குற்றச்சாட்டில் 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவௌியை பேணாத குற்றச்சாட்டில் 2,172 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.