சுண்ணக்கல் அகழ்விற்கு தடை

விக்டோரியா அணை அருகில் சுண்ணக்கல் அகழ்விற்கு தடை

by Bella Dalima 05-01-2021 | 4:32 PM
விக்டோரியா அணையில் இருந்து 100 மீட்டர் சுற்றளவினுள் சுண்ணக்கல் அகழ்வதற்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை பெற்றுக்கொண்ட சுற்றாடல் அமைச்சர், இன்று இதனை தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் குறித்த பகுதியில் பல தடவைகள் நில அதிர்வுகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.