பிரித்தானியாவில் Lockdown

பிரித்தானியாவில் Lockdown

by Staff Writer 05-01-2021 | 11:41 AM
Colombo (News 1st) பிரித்தானியாவில் பரவி வரும் புதிய வகை வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முடக்கம் அமுல்படுத்தப்படுவதாக பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இன்று (05) முதல் முடக்கம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் பாடசாலைகள் மூடப்படுவதாக தொலைக்காட்சி உரையில் பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார். முடக்கம் அமுல்படுத்தப்படும் பகுதிகளில் 56 மில்லியன் பேர் வசிப்பதுடன் சுமார் 44 மில்லியன் பேர் கடுமையான முடக்கல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த பகுதிகளில் அதிகளவானோர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். 24 மணித்தியாலத்தில் 80,000 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.