COVAX திட்டத்தின் கீழ் தடுப்பூசியை பெற அனுமதி

கொரோனா தடுப்பூசி குறித்த ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

by Staff Writer 05-01-2021 | 11:57 AM
Colombo (News 1st) கொவெக்ஸ் (COVAX) திட்டத்தின் கீழ் நாட்டிற்கு COVID - 19 தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. COVID- 19 வைரஸ் ஒழிப்பிற்கு பாதுகாப்பான மற்றும் செயற்றிறன் மிகு தடுப்பூசி, சமனான முறையில் நாடுகளுக்கு இடையில் பகிர்வதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கங்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் இடையில் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படும் பூகோள பிரவேசம் COVAX வசதி என குறிப்பிடப்படுகின்றது. அதன் கீழ் COVID- 19 வைரஸ் ஒழிப்பிற்காக தடுப்பூசி உற்பத்தி செய்யும் செயற்பாடு விரைவுபடுத்தப்படுவதுடன், அனைத்து நாடுகளினாலும் அந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு சாதாரண மற்றும் சமமான சந்தர்ப்பம் இதன்மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. இந்த முறைமையின் கீழ் இரண்டு கட்டங்களாக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான முதலாவது விண்ணப்பத்தை இலங்கை சமர்ப்பித்துள்ளது. இரண்டாம் கட்டமாக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் காப்புறுதி உடன்படிக்கைக்கு செல்வதற்காக எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில், சட்ட மா அதிபர் வழங்கியுள்ள ஆலோசனையின் பிரகாரம், COVAX வசதிகளின் அடிப்படையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவத்தின் B பிரிவை சமர்ப்பிப்பதற்கும் குறித்த உற்பத்தியாளருடன் உடன்படிக்கைக்கு செல்வதற்கும் அனைத்து அனுமதியும் கிடைத்துள்ளது.