கண்டி மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் கைது

இலஞ்ச குற்றச்சாட்டு: கண்டி மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் கைது

by Staff Writer 05-01-2021 | 4:42 PM
Colombo (News 1st) கண்டி மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் 150,000 ரூபா இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி கட்டுகஸ்தொட்ட பாலத்திற்கு அருகாமையில் டிஜிட்டல் பதாகையொன்றை நிறுவுவதற்காக கண்டி மாநகர சபையினால் முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை துரிதமாக முன்னெடுக்கும் பொருட்டு மாநகர சபை உறுப்பினர்கள் முறைப்பாட்டாளரிடம் இலஞ்சம் கோரியதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப்பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்தார். கண்டி தனியார் வைத்தியசாலையொன்றின் வாகன தரிப்பிடத்தில் வைத்தே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ஏனைய செய்திகள்