ஒரு தொகை போதைப்பொருட்களுடன் நால்வர் கைது 

நீர்கொழும்பு கடற்பரப்பில் ஒரு தொகை போதைப்பொருட்களுடன் நால்வர் கைது 

by Staff Writer 04-01-2021 | 2:02 PM
Colombo (News 1st) நீர்கொழும்பிற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 60 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவ படகொன்றை சோதனைக்குட்படுத்தியபோது அதிலிருந்து 100 கிலோகிராமிற்கும் மேற்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் 80 கிலோகிராம் ஹஷீஸ் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. நான்கு சந்தேக நபர்களும் போதைப்பொருளும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள் நால்வரும் சிலாபம் - தொடுவாய் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்கான அரசாங்கத்தின் கூட்டுத் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் கடற்பரப்பில் தொடர்ந்தும் ரோந்து பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.