நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

by Staff Writer 04-01-2021 | 5:03 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் இன்று (04) பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் மொனராகலை, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 100 MM இற்கும் அதிக மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.