உக்ரைன் பயணிகளால் சுற்றுலா தலங்களுக்களுக்கு பூட்டு

உக்ரைன் சுற்றுலா பயணிகளின் வருகையால் சில சுற்றுலா தலங்களுக்கு பூட்டு 

by Staff Writer 03-01-2021 | 6:26 PM
Colombo (News 1st) நாட்டுக்கு வருகை தந்துள்ள உக்ரைன் சுற்றுலபை் பயணிகள் பொலன்னறுவை மற்றும் சிகிரியாவை அண்மித்த பகுதிகளில் சுற்றுலா மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளனர். இவர்கள் நாளை (04) மற்றும் நாளை மறுதினங்களில் (05) குறித்த பகுதிகளுக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை பிற்பகல் 1 மணி முதல் பொலன்னறுவையில் 04 சுற்றுலா தலங்களுக்கு உள்நாட்டு பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, நாளை மறுதினம் நண்பகல் 12 மணி முதல் சிகிரியா சுற்றுலா வலயத்திலும் உள்நாட்டு பயணிகளுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.