24 மணித்தியாலங்களில் 12 பேர் உயிரிழப்பு

விபத்துக்களால் 24 மணித்தியாலங்களில் 12 பேர் உயிரிழப்பு

by Staff Writer 02-01-2021 | 2:54 PM
Colombo (News 1st) நாட்டில் 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது, 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். COVID-19 தொற்று ஏற்படுவதற்கு முன்னரான காலப்பகுதியில் நாளொன்றில் அதிகபட்சம் 8 பேர் வரை மாத்திரமே விபத்துக்களில் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார். அதற்கமைய, ஒப்பீட்டளவில் கடந்த 24 மணித்தியாலங்களிலேயே விபத்துக்களினால் ஏற்பட்ட உயிரிழப்பு அதிகளவில் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மது போதையில் வாகனம் செலுத்திய 253 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.