வௌிநாடுகளிலிருந்து 355 பேர் நாடு திரும்பினர்

வௌிநாடுகளிலிருந்து மேலும் 355 பேர் தாயகம் திரும்பினர்

by Staff Writer 01-01-2021 | 3:22 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களில் மற்றுமொரு குழுவினர் இன்று (01) தாயகம் திரும்பியுள்ளனர். வௌிநாடுகளில் இருந்து 355 பேர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக COVID - 19 தொற்று ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. கத்தாரிலிருந்து 30 பேரும் மாலைதீவிலிருந்து 35 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 290 பேரும் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். இவ்வாறு நாடு திரும்பியுள்ளவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.