by Staff Writer 31-12-2020 | 2:58 PM
Colombo (News 1st) மஹவ நகரில் பொலிஸ் சார்ஜன் ஒருவரை கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹவ நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 4 பேரை சோதனையிட முயற்சித்த போது, பொலிஸ் சார்ஜன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
இதன்போது, பலத்த காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மஹவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நிக்கவெரட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.