English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
31 Dec, 2020 | 1:40 pm
Colombo (News 1st) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கையிலுள்ள விடயங்களை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு திட்டமொன்று தயாரிப்பதாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினரின் அறிக்கை, குழுவின் தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் குசலா சரோஜினி வீரவர்தனவினால் நேற்று மாலை நீதியமைச்சர் அலி சப்ரியிடம் வழங்கப்பட்டுள்ளது.
குழுவின் ஏனைய உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா, நீதியமைச்சின் மேலதிக செயலாளர் ரோஹன ஹப்புகஸ்வத்த, முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்க, ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டீ.ஆர்.எல். ரணவீர ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
கடந்த மாதம் 29ஆம் திகதி இந்த குழு நியமிக்கப்பட்டிருந்ததுடன், சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
19 Apr, 2022 | 11:11 AM
16 Mar, 2022 | 11:01 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS