குரேஷியா நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழப்பு

குரேஷியா நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 30-12-2020 | 12:54 PM
Colombo (News 1st) குரேஷியாவில் (Croatia) நேற்று (29) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர். குரேஷியாவின் மத்திய பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் 12 வயது சிறுமியும் அடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நில நடுக்கத்தினால் Petrinja நகரின் அரைவாசி பகுதி, சேதமடைந்துள்ளதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.