இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை: அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது

by Staff Writer 30-12-2020 | 8:17 PM
Colombo (News 1st) இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் காணொளி கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளினதும் அதிகாரிகளுக்கு இடையிலான காணொளி கலந்துரையாடல் இன்று வௌிநாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு இலங்கை - இந்தியாவிற்கு இடையிலான அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமானதாகவும் வடக்கு, கிழக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக்கூறப்பட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். வெகு விரைவில் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.