இரத்தினபுரி வைத்தியசாலை விடுதி தற்காலிகமாக மூடல்

இரத்தினபுரி போதனா வைத்தியசாலை விடுதியொன்று தற்காலிகமாக மூடல் 

by Staff Writer 30-12-2020 | 4:02 PM
Colombo (News 1st) இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் 15 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர் ஒருவருக்கும் இரண்டு தாதியர்களுக்கும் சுகாதார ஊழியர்கள் இருவருக்கும் 9 நோயாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.