ஒக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசியை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி

by Staff Writer 30-12-2020 | 1:05 PM
Colombo (News 1st) ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை தமது நாட்டில் பயன்படுத்தவதற்கு பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளது. 50 மில்லியன் மக்களுக்காக, பிரித்தானியாவினால் 100 மில்லியன் மருந்துகளுக்கு முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஏப்ரல் மாதமளவில் கொரோனா தடுப்பு மருந்தினை தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்தன. இந்த தடுப்பு மருந்து, பாதுப்பானதும் தரமிக்கதும் என நிபுணர்களால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.