சிறைச்சாலை கொத்தணி: மேலும் 40 பேருக்கு தொற்று

சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் மேலும் 40 பேருக்கு தொற்று

by Staff Writer 29-12-2020 | 3:58 PM
Colombo (News 1st) சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் மேலும் 40 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஆண்கள் 37 பேரும் பெண்கள் மூவரும் அடங்குவதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். இன்று இதுவரையான காலப்பகுதியில் சிறைச்சாலை கொத்தணியில் 3,949 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையின் 846 பேரும் மெகசின் சிறைச்சாலையின் 830 பேரும் இதில் அடங்குகின்றனர்.

ஏனைய செய்திகள்