யானை உயிரிழந்தமை தொடர்பில் கைதானவருக்கு பிணை

கிளிநொச்சியில் யானை உயிரிழந்தமை தொடர்பில் கைதானவருக்கு பிணை

by Staff Writer 29-12-2020 | 1:59 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி யானை ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 02 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட நீதவான் T. சரவணராஜா முன்னிலையில் சந்தேக நபர் நேற்று முற்படுத்தப்பட்ட போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியிலுள்ள வயலில் இருந்து யானையொன்றின் உடல் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கியதால் யானை உயிரிழந்திருந்ததுடன் இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்