நான் இராஜினாமா செய்யவில்லை

இராஜினாமா செய்துள்ளதாக வௌியாகும் தகவலில் உண்மை இல்லை: அலி சப்ரி

by Staff Writer 29-12-2020 | 9:26 PM
Colombo (News 1st) தாம் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக வௌியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். நீதியமைச்சர் அலி சப்ரி அமைச்சுப் பதவியில் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ள தகவல் தொடர்பில் வினவிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.