இந்தியாவில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று

இந்தியாவில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி

by Bella Dalima 29-12-2020 | 3:35 PM
Colombo (News 1st) இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய வகை இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 6 பேருக்கு இந்தத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் 6 பேரும் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பியவர்கள். இந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து தமிழகம் சென்ற 17 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸின் புதிய திரிபின் பாதிப்பு உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முந்தைய கொரோனா வைரஸை விட இந்த புதிய வகை 70% சுலபமாகப் பரவக்கூடியது. ஆனால், அது தடுப்பூசி ஆய்வில் பெரிய பாதிப்பை உண்டாக்காது. வழக்கமான சமூக விலகல் மூலம் இதைத் தவிர்க்கலாம். தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள தடுப்பூசிகள் மூலமே இதை எதிர்கொள்ளலாம்.