வவுனியாவில் தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு

by Staff Writer 28-12-2020 | 7:48 PM
Colombo (News 1st) வவுனியா - பறன்நட்டகல் பகுதியில் 3 வயது சிறுமியும் தாயொருவரும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று (28) காலை இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். பிரேத பரிசோதனைக்காக இரண்டு சடலங்களும் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இன்று அதிகாலை 1.30 மணிக்கு பின்னர் மூன்று வயது சகோதரியும் தாயும் காணாமல் போனதாக உயிரிழந்த பெண்ணின் மூத்த பிள்ளை தந்தையிடம் தெரிவித்துள்ளது. பாலமோட்டை பகுதியில் கூலி வேலையிலிருந்த தந்தை வீட்டிற்கு வந்து இன்று அதிகாலை காணாமல் போனவர்களை தேடிய போது, இருவரின் சடலங்களும் கிணற்றிலிருந்ததாக வாக்குமூலம் வழங்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். உயிரிழந்த 42 வயதான தாய் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.