மன்னாரில் ஒரு தொகை மஞ்சள் எரியூட்டப்பட்டது

by Staff Writer 28-12-2020 | 4:42 PM
Colombo (News 1st) மன்னார் கடற்பரப்பினூடாக சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை மஞ்சள் பொலிசாரினால் இன்று (28) எரியூட்டப்பட்டது. கடல் மார்க்கமாக சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் 513 கிலோகிராம் மஞ்சள் சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக மன்னார் பொலிஸாரினால் எரியூட்டப்பட்டுள்ளது. இன்று காலை மாந்தை மேற்கு கழிவு அகற்றும் சுத்திகரிக்கும் இடத்தில் மன்னார் பொலிஸ் உதவி அத்தியட்சகர் மற்றும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையில் எரியூட்டப்பட்டது. சுகாதார சேவைகள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக இவ்வாறு குறித்த மஞ்சள் எரியூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.