பலத்த மழை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை

பலத்த மழை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை

by Staff Writer 27-12-2020 | 5:45 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேற்கு, மத்திய மாகாணங்களிலும் பதுளை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்த பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. பலத்த மழை பெய்யும் போது மின்னல் தாக்கம் ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.