நாளைய தினம் விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள்

நாளைய தினம் விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 27-12-2020 | 4:18 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் சில நாளைய தினம் (28) முதல் விடுவிக்கப்படவுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அந்தவகையில், கொழும்பு மாவட்டத்தின் மருதானை, வெல்லவீதி மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகள் நாளை (28) அதிகாலை 05 மணி தொடக்கம் விடுவிக்கப்படவுள்ளன. இதேவேளை, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் வேகந்த மற்றும் ஹுனுபிட்டிய கிராம சேவகர் பிரிவுகள், வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவின் மயூரா பிளேஸ் பகுதி, பொரளை பொலிஸ் பிரிவின் கல்கஹவத்தை மற்றும் காளிபுள்ளை வத்தை ஆகிய கிராம சேவகர் பிரிவுகள், வெல்லம்பிட்டி லக்சந்த செவண தொடர்மாடி குடியிருப்பு ஆகியன நாளைய தினம் அதிகாலை 05 மணி தொடக்கம் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.