ஜனாஸா தகனத்தைக் கண்டித்து வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்

by Staff Writer 26-12-2020 | 7:06 PM
Colombo (News 1st) கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதைக் கண்டித்து, வவுனியாவில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடத்தப்பட்டது. வவுனியா மன்னார் பிரதான வீதி, பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்தில், சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.