சதொச நிறுவன தலைவர் இராஜினாமா

சதொச நிறுவன தலைவர் பதவியிலிருந்து நுஷாட் பெரேரா இராஜினாமா

by Bella Dalima 26-12-2020 | 8:27 PM
Colombo (News 1st) சதொச நிறுவன தலைவர் பதவியில் இருந்து தாம் இராஜினாமா செய்துள்ளதாக நுஷாட் பெரேரா தெரிவித்தார். எனினும், லங்கா சதொச தலைவர் பதவியில் தொடர்ந்தும் உள்ளதாகக் குறிப்பிட்டார். சதொச மற்றும் லங்கா சதொச ஆகிய நிறுவனங்களின் தலைவராக இருப்பதால், தமக்கு அதிகரித்துள்ள வேலைப்பழு காரணமாக சதொச தலைவர் பதவியில் இருந்து மாத்திரம் விலகுவதாக அவர் கூறினார். எவரும் தன்னை பதவி விலக்கவில்லை எனவும் நுஷாட் பெரேரா சுட்டிக்காட்டினார்.