கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் குத்தி இளைஞர் கொலை

கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் குத்தி இளைஞர் கொலை

by Staff Writer 26-12-2020 | 4:51 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - முழங்காவில், சோலைப்பல்லவராயன்கட்டு மாதிரி கிராமம் பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். சோலைப்பல்லவராயன்கட்டு மாதிரி கிராமம் பகுதியை சேர்ந்த 31 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.