இலங்கையில் மேலும் ஒரு கொரோனா மரணம்

இலங்கையில் மேலும் ஒரு கொரோனா மரணம்

by Staff Writer 26-12-2020 | 10:15 PM
Colombo (News 1st) இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலுமொரு கொரோனா மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கொழும்பு 15-ஐ சேர்ந்த 67 வயதான ஒருவர் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இதனிடையே, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 593 பேர் இன்று அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 448 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் 52 பேர் சிறைச்சாலை கொத்தணியிலிருந்து பதிவாகியுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 40,380 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் மேலும் 712 பேர் குணமடைந்துள்ளனர். இதன் பிரகாரம், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ,051 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் 8 ,143 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.