வௌ்ளவத்தை கடலில் மிதந்த பெண்ணின் சடலம் மீட்பு

வௌ்ளவத்தை கடலில் மிதந்த பெண்ணின் சடலம் மீட்பு

by Staff Writer 26-12-2020 | 3:15 PM
Colombo (News 1st) கொழும்பு - வௌ்ளவத்தை கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று பகல் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வௌ்ளவத்தையை சேர்ந்த 26 வயதான யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.