by Staff Writer 26-12-2020 | 2:36 PM
Colombo (News 1st) கண்டி - விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பான நிபுணர் குழுவின் ஆய்வறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
அறிக்கையை, சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல குறிப்பிட்டார்.
சுற்றாடல் அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சில பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் ஆராய்வதற்காக 11 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.