யாழ். மீசாலையில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை

by Staff Writer 25-12-2020 | 2:51 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மீசாலை - புத்தூர் சந்திக்கு அருகில் நடாத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (25) முற்பகல் 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர். மீசாலை பகுதியை சேர்ந்த 47 வயதான ஒருவரே கத்துக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கத்திக்குத்துக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. கொடிகாமம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.