பொலிஸ் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றம் ஒத்திவைப்பு

பொலிஸ் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றம் ஒத்திவைப்பு

by Staff Writer 25-12-2020 | 3:28 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படவிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை இடமாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். இதற்கான விசேட அறிவிப்பு பொலிஸ் மா அதிபரால் வௌியிடப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் COVID - 19 தொற்று நிலையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.