by Staff Writer 25-12-2020 | 3:38 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். சோனகத் தெருவின் ஐந்துசந்தி பகுதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யாழ். வாழ் முஸ்லீம் சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்தில் அரசியல் தலைவர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.