Manchester City அணி அரையிறுதிக்கு தகுதி

EFL கிண்ண கால்பந்தாட்ட தொடரில் Manchester City அணி அரையிறுதிக்கு தகுதி

by Staff Writer 24-12-2020 | 1:26 PM
Colombo (News 1st) இங்கிலாந்து EFL கிண்ண கால்பந்தாட்ட தொடரில் மென்செஸ்டர் சிட்டி அணி (Manchester City ) அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து EFL கிண்ண கால்பந்தாட்ட தொடர் இந்நாட்களில் நடைபெற்று வருகிறது. தொடரின் ஒரு காலிறுதிப் போட்டியில் எவர்ட்டன் மற்றும் மென்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. போட்டியை இரு அணிகளும் சவாலாக ஆரம்பித்தன. எனினும் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் போட முடியவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணி வீரர்களின் ஆதிக்கம் மேலொங்கியது. நட்சத்திர வீரரான எடின்சன் கவானி 88 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் சிட்டி அணிக்கு முதல் கோலை ஈட்டிக்கொடுத்தார். போட்டியின் கடைசி நிமிடத்தில் மென்செஸ்டர் சிட்டி அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்தது. அந்த வாய்ப்பில் Anthony Martial மென்செஸ்டர் சிட்டி அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுக் கொடுத்தார். போட்டியில் 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய மென்செஸ்டர் சிட்டி அணி, EFL கிண்ண கால்பந்தாட்ட தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.