by Staff Writer 24-12-2020 | 6:16 PM
Colombo (News 1st) நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 686 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, 30,568 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 38,639 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அவர்களில் 7,887 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 184 பேரின் மரணங்கள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளன.