வடக்கு, கிழக்கில் மழை குறைவடையும் சாத்தியம்

வடக்கு, கிழக்கில் மழை குறைவடையும் சாத்தியம்

by Staff Writer 24-12-2020 | 3:31 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழைவீழ்ச்சி குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மாலை மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது சில சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடி மின்னலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.