ஜனாஸா எரிக்கப்படக் கூடாது: மஸ்கெலியாவில் போராட்டம்

முஸ்லிம்களின் ஜனாஸா எரிக்கப்படக் கூடாது: மஸ்கெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

by Staff Writer 24-12-2020 | 7:06 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்யும் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மஸ்கெலியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மலையக சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பு இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது. மஸ்கெலியா சுற்றுவட்ட சந்தியில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

ஏனைய செய்திகள்