சுகாதார விதிமுறைகளை மீறிய 35 பேர் கைது

சுகாதார விதிமுறைகளை மீறிய 35 பேர் கைது

by Staff Writer 24-12-2020 | 11:14 AM
Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 35 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை பேணாமை உள்ளிட்ட ஒழுங்கு விதிகளை மீறியமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.