சிறைக் கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்: உறவினர்கள் வலியுறுத்தல்

by Staff Writer 24-12-2020 | 8:25 PM
Colombo (News 1st) மஹர சிறைச்சாலையிலிருந்த தமது கணவர் இறந்துவிட்டார் என்பதை, மஹர சிறைச்சாலையில் வன்முறை இடம்பெற்று 24 நாட்களின் பின்னரே அவரது மனைவி அறிந்துகொண்டுள்ளார். இந்த நிலையில், மஹர சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற வன்முறையில் உயிரிழந்த கைதிகளின் உறவினர்கள் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர். சிறைக் கலவரத்தில் உயிரிழந்த தமது உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இதன்போது அவர்கள் வலியுறுத்தினர். இதனிடையே, மஹர சிறைச்சாலை சம்பவத்தை நேரில் கண்ட, நீதிமன்றத்தில் சாட்சியாளராக உள்ள கைதியொருவர், சிறைக்குள்ளேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் சாட்சியங்களுக்கு அழுத்தம் விடுக்கப்படுவதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.