முடக்கப்பட்டுள்ள இரண்டு பகுதிகளை சேர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம்

by Staff Writer 23-12-2020 | 8:33 PM
Colombo (News 1st) முடக்கப்பட்டுள்ள லக்சந்த செவன குடியிருப்பில் வாழும் மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொலன்னாவை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் ஒன்றுகூடிய இவர்கள் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முடக்கப்பட்டுள்ள தமது பிரதேசத்தை விரைவில் விடுவிக்குமாறு இவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதேவேளை, வண்ணாத்தமுல்லை - அலகஹகும்புற மக்களும் தமது பிரதேசத்தை முடக்கலில் இருந்து விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பொரளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் நயனபிரிய எதிரிசிங்க அவ்விடத்திற்கு சென்று மக்களுடன் கலந்துரையாடினார். பொது சுகாதார பரிசோதகர்களுடன் கலந்துரையாடி நாளை (24) தீர்மானம் அறிவிப்பதாக தெரிவித்த பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.