புத்தளத்தில் ஒரு தொகை மஞ்சளுடன் இருவர் கைது

by Staff Writer 23-12-2020 | 12:03 PM
Colombo (News 1st) புத்தளம் - மாம்புரி பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று (22) பிற்பகல் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பொலித்தீன் பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் 1,980 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மாம்புரி பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். மஞ்சள் கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.