சிசுக்களை பணத்திற்கு விற்ற சந்தேக நபருக்கு பிணை 

சிசுக்களை பணத்திற்கு விற்ற சந்தேக நபருக்கு பிணை 

by Staff Writer 23-12-2020 | 9:52 AM
Colombo (News 1st) சிசுக்களை பணத்திற்காக விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தலா 2 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் பிணை நிபந்தனைகளின் கீழ் சந்தேக நபர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி சந்தேக நபர் மீண்டும் மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மொறட்டுவை பகுதியில் கர்ப்பிணிகளை தடுத்து வைத்து, சிசுக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 47 வயதான சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மாத்தளை உக்குவல பகுதியை சேர்ந்த குறித்த சந்தேக நபரால் இதுவரை 30 சிசுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார். சிசு விற்பனைக்காக சந்தேக நபரால் பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.