by Staff Writer 23-12-2020 | 4:24 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 582 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, 29,882 கொரோனா நோயாளர்கள் இதுவரை குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை 38,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 7,994 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 183 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.