26 முதல் நாட்டிற்கு வரும் விமானங்களுக்கு சலுகை

26ஆம் திகதி முதல் நாட்டிற்கு வரும் விமானங்களுக்கு சலுகை 

by Staff Writer 22-12-2020 | 12:20 PM
Colombo (News 1st) எதிர்வரும் 26ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 19ஆம் திகதி வரை விமானங்கள் தரையிறங்குவதற்கும் தரித்து நிற்பதற்குமான கட்டணங்களை அறவிடாதிருப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விமான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் சுற்றுலா அமைச்சர் இந்த திட்டத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.