வரிச்சலுகை மூலம் சீனி, தேங்காய் எண்ணெய் இறக்குமதியில் பாரிய மோசடி: மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

by Staff Writer 22-12-2020 | 8:55 PM
Colombo (News 1st) அண்மையில் வழங்கப்பட்ட வரிச்சலுகை மூலம் சீனி மற்றும் தேங்காய் எண்ணெய் இறக்குமதியில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஜூன் 16, 26 மற்றும் ஜூலை 10 ஆம் திகதிகளில் வௌியிடப்பட்ட மூன்று வர்த்தமானி அறிவித்தல்களை இரத்து செய்து, டிசம்பர் 14 ஆம் திகதி வௌியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம், இரண்டு தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 10,000 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய்க்கு வரிச்சலுகை நீடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டது. காணொளியில் காண்க...