மன்னம்பிட்டி - கல்லேல்ல பகுதி வௌ்ளத்தில் மூழ்கியது

மன்னம்பிட்டி - கல்லேல்ல பகுதி வௌ்ளத்தில் மூழ்கியது

by Staff Writer 22-12-2020 | 1:30 PM
Colombo (News 1st) நிலவும் அதிக மழையுடனான வானிலையினால் பொலன்னறுவை முதல் மட்டக்களப்பு வரையான வீதியில் மன்னம்பிட்டி - கல்லேல்ல பகுதி வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால், அந்த பகுதியூடாக சில வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த பகுதியூடாக கனரக வாகனங்கள் செல்ல முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.