எட்டியாந்தோட்டையில் புதையல் தோண்டிய இருவர் கைது

எட்டியாந்தோட்டையில் புதையல் தோண்டிய இருவர் கைது

by Staff Writer 22-12-2020 | 9:47 AM
Colombo (News 1st) எட்டியாந்தோட்டை பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரலுகொல்லவத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் சில பூஜைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த 21 வயதான இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.