சுகாதார விதிமுறைகளை மீறிய 41 பேர் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய சுற்றிவளைப்பு 

by Staff Writer 21-12-2020 | 4:23 PM
Colombo (News 1st) முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவௌியை ​பேணாத 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ​ரோஹண தெரிவித்துள்ளார். சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பதனை ஆராய்வதற்காக, பொது போக்குவரத்து சேவைகளில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோத்தர்கள் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுத்தப்படுவதாக அவர் ​மேலும் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்