by Staff Writer 21-12-2020 | 4:23 PM
Colombo (News 1st) முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவௌியை பேணாத 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பதனை ஆராய்வதற்காக, பொது போக்குவரத்து சேவைகளில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோத்தர்கள் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.