by Staff Writer 21-12-2020 | 5:33 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், கண்டி மாவட்டத்தின் தொழுவ, உடுதும்புர, மாத்தளை மாவட்டத்தின் நாவுல, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.